Friday, August 7, 2009

அயல் நாட்டு அகதிகள்


டாலருக்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து மீட்க
முடியாமல் நீரிலேயே மூழ்கி கிடக்கும் மீன் குஞ்சுகள்


பண்டிகை நாட்களில் குடும்பதோடு குதூகலிக்க முடியாமல்
Happy newyear, Happy pongal, என்று மனம் முழுக்க
சோகத்தோடு கைப்பேசியில் கூக்குரலிடும்
கைய்யாலாகாதவர்கள்


இங்கே கண்ணே கனியமுதே என்றெல்லாம் காதலியை நெஞ்சுருக
கொஞ்சி மகிழ அவள் நேரில் இல்லை
கனிப்பொறியிலும் கைப்பேசியிலும் காதலியின் குரல் கேட்டு கேட்டு
எங்கள் காதல் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது


தொலைதூர காதல் செய்தே தொலைந்து போனவர்கள் நாங்கள்
நான் இங்கே நல்லா இருக்கேன் என்று சொல்லும்
default குரலுக்கு சொந்தக்காரர்கள்


உணவில் குறையிருந்தாலும் உடல் நலக்குறைவிருந்தாலும்
first class என்று சொல்லியே பலகிப்போனவர்கள்
வியர்வையில் நாங்கள் உழன்றாலும் விடுமுறைக்கு போகும்முன்
வாசனை பூச்சு வாங்க மறப்பதில்லை
எங்கள் வியர்வையின் வாசம் வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க


கணிப்பொறிக்குள் அகப்பட்டுக்கொண்ட எலிகள்
நாங்கள் கலப்பை பிடிக்கவில்லை ஆனால் நாங்களும்
கலைத்துதான் போகிறோம்.


எண்ணெய் கிணற்று தவளைகள் நாங்கள்
வாயுக்குழாயில் சிக்கிக்கொண்ட வாயில்லா பூச்சிகள்


திறைக்கடலோடி திரவியம் தேடும்
திசைமாறிய பறவைகள் நாங்கள்


எங்களுக்கும் மாதக்கடைசி உண்டு என்பது யாருக்கும் புரிவதில்லை
உனக்கென்ன!

விமான பயணம் வெளி நாட்டு வேலை என்றெல்லாம்
உள்ளூர் வாசிகள் விடும் பெறுமூச்சு வளைகுடா நாட்டின்
வெப்பத்தைவிட சற்று அதிகமாகவே சுடுகிறது!


ஆரம்பத்தில் முதலீடில்லா தொழில் இது என்று பெருமிதப்பட்டோம்
எங்களுகே தெறியாமல் எங்கள் இளமையை அல்லவா முதலீடு
செய்திருக்கிம்றோம்!இப்போதுதான் புரியத்துவங்கியது சேர்ந்தே
நரைக்கவும் துவங்கியது.


நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை!வாலிபத்தை!!
இழப்பீடு கிடைக்காத இழப்பு இது, நஷ்டைஈடு கிடைக்காத நஷ்டம் இது
யாருக்காக!எதற்க்காக!! ஏன்!!!


தந்தையின் கடன்,தங்கையின் திருமணம் தம்பியின் படிப்பு
சொந்தமாய் வீடு,குழந்தையின் எதிர்காலம்,குடும்பச்சுமை
இப்படி காரணம் ஆயிரம் தோரணம் போல் கண் முன்னே.

Tuesday, July 21, 2009

சுவாரஸ்ய வலைப்பதிவர் விருது


இப்போது வலையுலகில் சுவாரஸ்யமாய் ஓடிக் கொண்டிருக்கும் சுவாரஸ்ய வலைபதிவர் விருது வைபவத்தில் என்னையும் கூட சேர்த்து விட்டிருக்கிறார்
பதிவர் ஷஃபி அவர்கள். நன்றி ஷஃபி அண்ணா.இன்னும் ஆறு பேருக்கு இந்த விருதை கொடுக்கணுமாம் நான் ரசித்து படித்த பிளாக்ல அவார்ட் எல்லாருக்கும் கொடுத்துட்டாங்க இருந்தாலும் மீண்டும் குறிப்பிடுகிறேன்.
1.கற்போம் வாருங்கள் (ஜமால்).
2.மன விலாசம் ( நவாஸ்).
3.என் உயிரே (அபு).
4.மழைக்கு ஒதுங்கியவை (அ.மு.செய்யது).
5.வீட்டுபுறா (சக்தி).
6.வானம் உன் வசப்படும் (புதியவன்).
ஆறுபேர் என்ப‌தால் ம‌ட்டுமே ப‌ட்டிய‌ல் இத்துட‌ன் நிறுத்த‌ப்ப‌டுகிற‌து. ஏனென்றால் சுவார‌ஸ்ய‌ ப‌திவ‌ர்க‌ள் நிறைய‌ பேர் உள்ள‌ன‌ர். அத்த‌னை பேருக்கும் என் பணிவான‌ வாழ்த்துக்க‌ள்

Tuesday, June 9, 2009

காவியம்


விரல்
தீண்டும் முன்பே;
நகம்
சொல்லி சென்றதடா;
உன் எண்ணங்களை
காயங்களாய்.

Saturday, June 6, 2009

சுவாசம்


என்னவனே;
என்னுள் நிறைந்தவனே காலங்கள் கடந்தாலும்
உன்னோடு நான் கொண்ட காதல் அப்படியே


எனக்குள் மட்டும் ஏன் இந்த தடுமாற்றம்;
சொல்ல வந்த வார்த்தைகளை
சொல்லாமல் தவிக்கிறேன்,


காலம் கணிந்தாலும்
கண்மூடி விழிக்கிறேன்,
ஏன் தெறியுமா?
என் காதலை உன்னிடம் சொல்லிய பிறகு
நீ மறுத்துவிடுவாயோ!

உன் சுவாசத்தை கேட்டுப்பார்;
அது சொல்லும்; உன்மீது நான் கொண்ட காதலை,
உன்னோடு நான் கொண்ட பந்தம்;
மண்ணோடு மழைக்கொண்ட சொந்தம்,

என்னவனே எனக்கு நானே
ஆறுதல் கூறிக் கொண்டேன்
சொல்லிய காதலைவிட
சொல்லாமல் பிரிந்த காதல்கள்
இன்னும் உலகில் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன.

Saturday, May 23, 2009

என்னைப்பற்றி


என் உயிரே... அபு...


அபுவின் நீண்ட நாள் சிறிய குழப்பம் இன்று தெளிவாகிவிடும் என்று நினைக்கிறேன்.
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
என் பெயர் நிஷா.இது என்னாங்க கேள்வி அப்போதைக்கு பெற்றோர் வைக்குற பெயர்தான்.எனக்கு என் பெயர் பிடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
பகல் வெங்காயம் கட் பன்னும்போது.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
இதுல என்ன சந்தேகம் பிடிக்கும்.

4.பிடித்த மதிய உணவு என்ன?
நெய்சோறு, சிக்கன், ப்ரட் ஸ்வீட்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
ரொம்ப கஷ்டம் யாரையும் அவ்வளவு சீக்கரமா நம்பிடமாட்டேன்.ஆனால் நம்பி பழகிட்டா நல்ல தோழியா இருப்பேன்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
இரண்டும் பிடிக்காது.மழையில் குளிக்க பிடிக்கும்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவர்களுடைய முகம்.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்தது எப்போதும் சந்தோஷமா இருப்பேன்.,பிடிக்காதது என் பெற்றோர் நான் கேட்காமலே தந்த வரம் பிடிவாதம்.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்தது அவர் என்மீது கோபம்பட மாட்டார்.பிடிக்காததும் அதேதான்.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
இது என்னங்க கேள்வி நாணயம்னு சொன்னா பூவும் தலையும் இருக்கனும்,குடும்பம்னா கணவன் மனைவி பக்கத்தில் இருந்தால்தான் அழகு.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
நீல நிற சுடிதார்.

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
மானிட்டரை பார்த்து டைப் பண்ணி கொண்டு, லட்சம் கனவுகள்(modthi vilayaadu)பாடல் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
நீல வர்ணமாக ஆசை.

14.பிடித்த மணம்?
மல்லிகை மணம்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
1.இவர் ஒரு கவிஞன்.கவிதை மட்டுமே இவரின் உலகம்.இவரின் கவிதை அனைத்துமே அருமை.
2.இவரின் அனைத்து பதிவுகளும் எனக்கு பிடிக்கும்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
அபுஅஃப்ஸர்... என் உயிரே...
இவரோட ஒவ்வொரு கவிதையிலும் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உறவுகளை தேடும் விதம் அழகு.இவரின் படைப்பில் நான் ரசித்த என் மதிப்பிற்குறிய வழிகாட்டி இந்த தலைப்பின் அனைத்து வரிகளும் அவரின் கண்ணீர் துளிகல்.
சக்கரை_சுரேஷ்:
இவர பற்றி சொல்லனும்னா ரொம்ப நல்லவர் வல்லவர் சொல்லிகிட்டே போகலாம் ஆனால் இவர் அரசியலுக்கு போக வேண்டியவர்.

17. பிடித்த விளையாட்டு?
வீடியோ கேம்ஸ்

18.கண்ணாடி அணிபவரா?
இல்லை.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
நான் ரசித்த படம் சந்தோஷ் சுப்ரமணியம்.காதல் திரைபடம் காமெடி படம்.


20.கடைசியாகப் பார்த்த படம்?

அருந்ததி

21.பிடித்த பருவ காலம் எது?

பனிக்காலம்.

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

குர்ஆன் (தர்ஜமா),அமல்களின் சிறப்புகள்.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

கணவனின் புகைப்படம் புதிதாக வரும்பொழுது (வாரம் ஒருமுறை).

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

என் கணவனுக்காக என் மொபைலில் இருந்துவரும் ரிங்டோன் முன்பே வா பாடல்(சில்லுனு ஒரு காதல்).

பிடிக்காத சத்தம்:இடியின் சத்தம்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

துபாய், மலேசியா.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

மருதாணி விடுவேன்,சேலை டிசைனிங் பன்னுவேன்.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

வட்டி,புறம் பேசுவது,திருட்டு.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

டென்ஷன்,டென்ஷன்,டென்ஷன்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

இந்தியாவில் மைசூர் பிருந்தாவனம்,ஊட்டி மலர்கண்காட்சி.வெளிநாடு துபாய் ஜுமைரா கடற்கரை.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

கவலை ஒரு வியாதி அதனால் கவலை இல்லாம சந்தோஷமா இருக்கனும்.

31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

இதுவரை இல்லை,இனியும் இல்லவே இல்லை.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

இறைவன் நமக்கு தர நினைகுறதை யாராலும் தடுக்க முடியாது,அவன் தடுக்க நினைக்குறதை யாராலும் தரவும் முடியாது அதனால் எப்போதுமே சந்தோஷமா இருக்கனும்.

ஓவரா கலாய்க்காதீங்கப்பா

இதே கேள்விகளுக்கு தங்களுடைய பதிலை சொல்வதற்கு

1.புதியவன்.
2.பூர்ணி






Friday, May 22, 2009

உன்னை நினைத்து


விழி மூடி உறங்கச் சென்றால்
என் இதயவாசலில்
எனக்குள் உன் எண்ணங்கள் பிறக்கின்றன;
உனைக்கண்டு திகைக்கின்றேன்
எனைக்கண்டு சிலர் நகைக்கின்றனர்;
ஏன்! தெறியுமா நான் பைத்தியக்காரியாம்
ஆம் அவர்களுக்கு என்ன தெறியும்
நான் உன்மீது கொண்டுள்ள காதல்,

சுகமான நினைவுகளோடு
சுமக்கிறேன் உன்னை;
ஏன்! இதயம் துடிக்க மறந்தாலும்
சில மணித்துளி நினைவுகள் நிலைத்திருக்கும்

ஆனால் நான் உன்னை
நேசிப்பதை நிறுத்திவிட்டால்
என் உயிரே இருக்காது
உன்மீது நான் கொண்டுள்ள காதல் உலகமறியாது;
அறிந்தாலும் அதற்கு புரியாது
ஏன் என்றால் அவர்கள் பார்வையில்
நான் பைத்தியக்காரி.

Saturday, May 16, 2009

அல்லாஹுஅக்பர்

பூமியின் எந்தப் பகுதியின் மீது தொழுகையின் மூலம்,அல்லாஹ்வை நினைவு கூரப்படுகிறதோ, அது பூமியின் மற்ற பகுதிகளிடம் பெருமை பேசுகிறது.




































MASHA ALLAH

நூல்:அமல்களின் சிறப்புகள்.














Thursday, April 30, 2009

ஹைக்கூ



நட்பு
உயிர்போகும் நேரத்திலும்
அவள் முகம் பார்த்து
உயிர் பிரிய வேண்டும்
என்று நினைக்கும் உறவு காதல்.
உயிர் போகும் போதும்
உயிர் கொடுத்து காக்க துடிக்கும் உறவு நட்பு.



பார்வை
கருவறையில் நான் இருந்தவரை
வெளிச்சத்தை கண்டதில்லை.
பிறந்த பின்பும் நான் கருவறையில்தான் வாழ்கிறேன்.
நினைவு
நேசிக்கும் உறவுகள் பிரிந்து சென்றாலும்
நேசித்த நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும்

பூக்கள்
பூக்களுக்கு ஒரு நாள்தான் ஆயுள்
ஆனால் அதையும் பரித்து
பூஜை செய்கிறான் மனிதன்
நூறு வருட ஆயுள் வேண்டி.
மெளனம்
ஒரு மனிதனை தாக்கு மிகப்பெரிய ஆயுதம்
அவனுக்கு பிடித்த ஒரு உறவின் மெளனம்

Saturday, April 25, 2009

தொடரும்


தெளிந்த நீரோடைதனில் தெரித்த பனித்துளியாய்
கண்கள் உனைக் கண்ட முதல்
அமைதி கடல்தனிலே அலைபோல நீயும் வந்தாய்;

உருவம் இல்லா உறவு இது
உன்னாலே உருவானது
திசையறியா பறவை
நான் கானும் திசையெல்லாம்
நீயாகி வந்து நின்றாய்;
கேள்வியோடு நின்றவன் நான்
பதிலை தந்தவள் நீ

காடு மலை பாராத காட்டாற்று வெள்ளமாய்
தடைகல் பல தாண்டி வந்தோம்
கல்வி நம்மை சேர்த்தது
கல்லூரி நம்மை பிரித்தது;

மங்கையான உன்னை
மனைவியாக வேண்டி யாசித்தேன்;
இரு மனதுடன் நீ யோசித்தாய்
காயங்களை எனக்குள் தந்துவிட்டு
அதற்க்கு மருந்தை சொல்லாமல் மலுப்பிவிட்டாய்

வலி பொறுக்க முடியாமல்
வஞ்சி உனைக்; கெஞ்சி நின்றேன்;
வாசற்படி வந்த என்னை
காசுக்கொடுத்து அனுப்ப சொன்னாய்

உணவுக்காக வந்தவன் இல்லை
உன் உறவுக்காக வந்தவன்
யாசிக்க வந்தவன் இல்லை
உன்னை நேசிக்க வந்தவன்

கனவுகளை நிஜமாக்கி
கற்பனைகளை விற்று
கவிதை வாங்குகிறேன்
உனக்காக பிறந்த வரிகள்
உன்னால் மட்டுமே வாழ்கிறது;
எழுத்துரிமை கொடுத்துவிட்டு
பதிப்புரிமை மறுத்ததேனோ

கடலில் விழுந்த எனக்கு
கட்டுமரம் தந்தாய்
வழி அறியாமல் விழிக்குறேன்
மீண்டும் திசை காட்ட மாட்டாயோ
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
உன்னை என்னி மட்டுமே வாழ்ந்திருப்பேன்.

Tuesday, April 21, 2009

எங்கே நீ


உன் நினைவுகளால்...
நிஜங்களை நினைத்து
நிலைமாறி தவிக்கிறேன்.

அணை இல்லா நெஞ்சத்தில்
ஆசைகள் எத்தனையோ!
துணையாக வந்துவிட
துணிந்து நின்றேன் உன்னோடு

கனவில் வந்தது போல்
என்னை கண்மூடி
உறங்கச்சொன்னாய்.

பெற்றவலுக்குத்தான் தெறியும்
பிள்ளையின் பாசம்.
கருக்கலைப்பு செய்துவிட்டு
பிள்ளை வரம் கேட்கிறாய்

காகிதத்தை கிழித்துவிட்டு
கவிதை வரிகள் கேட்கிறாய்.
விடை தெறியா வினாக்களுடன்
உனக்கே!உனக்காக!!