Tuesday, June 9, 2009

காவியம்


விரல்
தீண்டும் முன்பே;
நகம்
சொல்லி சென்றதடா;
உன் எண்ணங்களை
காயங்களாய்.

Saturday, June 6, 2009

சுவாசம்


என்னவனே;
என்னுள் நிறைந்தவனே காலங்கள் கடந்தாலும்
உன்னோடு நான் கொண்ட காதல் அப்படியே


எனக்குள் மட்டும் ஏன் இந்த தடுமாற்றம்;
சொல்ல வந்த வார்த்தைகளை
சொல்லாமல் தவிக்கிறேன்,


காலம் கணிந்தாலும்
கண்மூடி விழிக்கிறேன்,
ஏன் தெறியுமா?
என் காதலை உன்னிடம் சொல்லிய பிறகு
நீ மறுத்துவிடுவாயோ!

உன் சுவாசத்தை கேட்டுப்பார்;
அது சொல்லும்; உன்மீது நான் கொண்ட காதலை,
உன்னோடு நான் கொண்ட பந்தம்;
மண்ணோடு மழைக்கொண்ட சொந்தம்,

என்னவனே எனக்கு நானே
ஆறுதல் கூறிக் கொண்டேன்
சொல்லிய காதலைவிட
சொல்லாமல் பிரிந்த காதல்கள்
இன்னும் உலகில் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன.