Saturday, May 23, 2009

என்னைப்பற்றி


என் உயிரே... அபு...


அபுவின் நீண்ட நாள் சிறிய குழப்பம் இன்று தெளிவாகிவிடும் என்று நினைக்கிறேன்.
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
என் பெயர் நிஷா.இது என்னாங்க கேள்வி அப்போதைக்கு பெற்றோர் வைக்குற பெயர்தான்.எனக்கு என் பெயர் பிடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
பகல் வெங்காயம் கட் பன்னும்போது.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
இதுல என்ன சந்தேகம் பிடிக்கும்.

4.பிடித்த மதிய உணவு என்ன?
நெய்சோறு, சிக்கன், ப்ரட் ஸ்வீட்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
ரொம்ப கஷ்டம் யாரையும் அவ்வளவு சீக்கரமா நம்பிடமாட்டேன்.ஆனால் நம்பி பழகிட்டா நல்ல தோழியா இருப்பேன்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
இரண்டும் பிடிக்காது.மழையில் குளிக்க பிடிக்கும்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவர்களுடைய முகம்.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்தது எப்போதும் சந்தோஷமா இருப்பேன்.,பிடிக்காதது என் பெற்றோர் நான் கேட்காமலே தந்த வரம் பிடிவாதம்.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்தது அவர் என்மீது கோபம்பட மாட்டார்.பிடிக்காததும் அதேதான்.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
இது என்னங்க கேள்வி நாணயம்னு சொன்னா பூவும் தலையும் இருக்கனும்,குடும்பம்னா கணவன் மனைவி பக்கத்தில் இருந்தால்தான் அழகு.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
நீல நிற சுடிதார்.

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
மானிட்டரை பார்த்து டைப் பண்ணி கொண்டு, லட்சம் கனவுகள்(modthi vilayaadu)பாடல் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
நீல வர்ணமாக ஆசை.

14.பிடித்த மணம்?
மல்லிகை மணம்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
1.இவர் ஒரு கவிஞன்.கவிதை மட்டுமே இவரின் உலகம்.இவரின் கவிதை அனைத்துமே அருமை.
2.இவரின் அனைத்து பதிவுகளும் எனக்கு பிடிக்கும்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
அபுஅஃப்ஸர்... என் உயிரே...
இவரோட ஒவ்வொரு கவிதையிலும் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உறவுகளை தேடும் விதம் அழகு.இவரின் படைப்பில் நான் ரசித்த என் மதிப்பிற்குறிய வழிகாட்டி இந்த தலைப்பின் அனைத்து வரிகளும் அவரின் கண்ணீர் துளிகல்.
சக்கரை_சுரேஷ்:
இவர பற்றி சொல்லனும்னா ரொம்ப நல்லவர் வல்லவர் சொல்லிகிட்டே போகலாம் ஆனால் இவர் அரசியலுக்கு போக வேண்டியவர்.

17. பிடித்த விளையாட்டு?
வீடியோ கேம்ஸ்

18.கண்ணாடி அணிபவரா?
இல்லை.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
நான் ரசித்த படம் சந்தோஷ் சுப்ரமணியம்.காதல் திரைபடம் காமெடி படம்.


20.கடைசியாகப் பார்த்த படம்?

அருந்ததி

21.பிடித்த பருவ காலம் எது?

பனிக்காலம்.

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

குர்ஆன் (தர்ஜமா),அமல்களின் சிறப்புகள்.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

கணவனின் புகைப்படம் புதிதாக வரும்பொழுது (வாரம் ஒருமுறை).

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

என் கணவனுக்காக என் மொபைலில் இருந்துவரும் ரிங்டோன் முன்பே வா பாடல்(சில்லுனு ஒரு காதல்).

பிடிக்காத சத்தம்:இடியின் சத்தம்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

துபாய், மலேசியா.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

மருதாணி விடுவேன்,சேலை டிசைனிங் பன்னுவேன்.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

வட்டி,புறம் பேசுவது,திருட்டு.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

டென்ஷன்,டென்ஷன்,டென்ஷன்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

இந்தியாவில் மைசூர் பிருந்தாவனம்,ஊட்டி மலர்கண்காட்சி.வெளிநாடு துபாய் ஜுமைரா கடற்கரை.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

கவலை ஒரு வியாதி அதனால் கவலை இல்லாம சந்தோஷமா இருக்கனும்.

31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

இதுவரை இல்லை,இனியும் இல்லவே இல்லை.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

இறைவன் நமக்கு தர நினைகுறதை யாராலும் தடுக்க முடியாது,அவன் தடுக்க நினைக்குறதை யாராலும் தரவும் முடியாது அதனால் எப்போதுமே சந்தோஷமா இருக்கனும்.

ஓவரா கலாய்க்காதீங்கப்பா

இதே கேள்விகளுக்கு தங்களுடைய பதிலை சொல்வதற்கு

1.புதியவன்.
2.பூர்ணி






Friday, May 22, 2009

உன்னை நினைத்து


விழி மூடி உறங்கச் சென்றால்
என் இதயவாசலில்
எனக்குள் உன் எண்ணங்கள் பிறக்கின்றன;
உனைக்கண்டு திகைக்கின்றேன்
எனைக்கண்டு சிலர் நகைக்கின்றனர்;
ஏன்! தெறியுமா நான் பைத்தியக்காரியாம்
ஆம் அவர்களுக்கு என்ன தெறியும்
நான் உன்மீது கொண்டுள்ள காதல்,

சுகமான நினைவுகளோடு
சுமக்கிறேன் உன்னை;
ஏன்! இதயம் துடிக்க மறந்தாலும்
சில மணித்துளி நினைவுகள் நிலைத்திருக்கும்

ஆனால் நான் உன்னை
நேசிப்பதை நிறுத்திவிட்டால்
என் உயிரே இருக்காது
உன்மீது நான் கொண்டுள்ள காதல் உலகமறியாது;
அறிந்தாலும் அதற்கு புரியாது
ஏன் என்றால் அவர்கள் பார்வையில்
நான் பைத்தியக்காரி.

Saturday, May 16, 2009

அல்லாஹுஅக்பர்

பூமியின் எந்தப் பகுதியின் மீது தொழுகையின் மூலம்,அல்லாஹ்வை நினைவு கூரப்படுகிறதோ, அது பூமியின் மற்ற பகுதிகளிடம் பெருமை பேசுகிறது.




































MASHA ALLAH

நூல்:அமல்களின் சிறப்புகள்.