Friday, August 7, 2009

அயல் நாட்டு அகதிகள்


டாலருக்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து மீட்க
முடியாமல் நீரிலேயே மூழ்கி கிடக்கும் மீன் குஞ்சுகள்


பண்டிகை நாட்களில் குடும்பதோடு குதூகலிக்க முடியாமல்
Happy newyear, Happy pongal, என்று மனம் முழுக்க
சோகத்தோடு கைப்பேசியில் கூக்குரலிடும்
கைய்யாலாகாதவர்கள்


இங்கே கண்ணே கனியமுதே என்றெல்லாம் காதலியை நெஞ்சுருக
கொஞ்சி மகிழ அவள் நேரில் இல்லை
கனிப்பொறியிலும் கைப்பேசியிலும் காதலியின் குரல் கேட்டு கேட்டு
எங்கள் காதல் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது


தொலைதூர காதல் செய்தே தொலைந்து போனவர்கள் நாங்கள்
நான் இங்கே நல்லா இருக்கேன் என்று சொல்லும்
default குரலுக்கு சொந்தக்காரர்கள்


உணவில் குறையிருந்தாலும் உடல் நலக்குறைவிருந்தாலும்
first class என்று சொல்லியே பலகிப்போனவர்கள்
வியர்வையில் நாங்கள் உழன்றாலும் விடுமுறைக்கு போகும்முன்
வாசனை பூச்சு வாங்க மறப்பதில்லை
எங்கள் வியர்வையின் வாசம் வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க


கணிப்பொறிக்குள் அகப்பட்டுக்கொண்ட எலிகள்
நாங்கள் கலப்பை பிடிக்கவில்லை ஆனால் நாங்களும்
கலைத்துதான் போகிறோம்.


எண்ணெய் கிணற்று தவளைகள் நாங்கள்
வாயுக்குழாயில் சிக்கிக்கொண்ட வாயில்லா பூச்சிகள்


திறைக்கடலோடி திரவியம் தேடும்
திசைமாறிய பறவைகள் நாங்கள்


எங்களுக்கும் மாதக்கடைசி உண்டு என்பது யாருக்கும் புரிவதில்லை
உனக்கென்ன!

விமான பயணம் வெளி நாட்டு வேலை என்றெல்லாம்
உள்ளூர் வாசிகள் விடும் பெறுமூச்சு வளைகுடா நாட்டின்
வெப்பத்தைவிட சற்று அதிகமாகவே சுடுகிறது!


ஆரம்பத்தில் முதலீடில்லா தொழில் இது என்று பெருமிதப்பட்டோம்
எங்களுகே தெறியாமல் எங்கள் இளமையை அல்லவா முதலீடு
செய்திருக்கிம்றோம்!இப்போதுதான் புரியத்துவங்கியது சேர்ந்தே
நரைக்கவும் துவங்கியது.


நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை!வாலிபத்தை!!
இழப்பீடு கிடைக்காத இழப்பு இது, நஷ்டைஈடு கிடைக்காத நஷ்டம் இது
யாருக்காக!எதற்க்காக!! ஏன்!!!


தந்தையின் கடன்,தங்கையின் திருமணம் தம்பியின் படிப்பு
சொந்தமாய் வீடு,குழந்தையின் எதிர்காலம்,குடும்பச்சுமை
இப்படி காரணம் ஆயிரம் தோரணம் போல் கண் முன்னே.

38 comments:

நட்புடன் ஜமால் said...

எங்கள் காதல் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது
]]

வலிகளை அதிகமாக்கிய வரிகள்.

sakthi said...

கனிப்பொறியிலும் கைப்பேசியிலும் காதலியின் குரல் கேட்டு கேட்டு
எங்கள் காதல் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது

நச் வரிகள் மா

sakthi said...

தொலைதூர காதல் செய்தே தொலைந்து போனவர்கள் நாங்கள்
நான் இங்கே நல்லா இருக்கேன் என்று சொல்லும்
default குரலுக்கு சொந்தக்காரர்கள்

வலியுடன் கூடிய கவி வரிகள்

நட்புடன் ஜமால் said...

வியர்வையில் நாங்கள் உழன்றாலும் விடுமுறைக்கு போகும்முன்
வாசனை பூச்சு வாங்க மறப்பதில்லை
எங்கள் வியர்வையின் வாசம் வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க]]


நிதர்சணம் ரணம்

நட்புடன் ஜமால் said...

உனக்கென்ன!

விமான பயணம் வெளி நாட்டு வேலை என்றெல்லாம்
உள்ளூர் வாசிகள் விடும் பெறுமூச்சு வளைகுடா நாட்டின்
வெப்பத்தைவிட சற்று அதிகமாகவே சுடுகிறது!
]]


இதன் வேதனையை சொல்லில் சொல்லி மாளாது ...

S.A. நவாஸுதீன் said...

எங்கள் காதல் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது

மனதை ரணமாக்கிய வரிகள்

S.A. நவாஸுதீன் said...

விமான பயணம் வெளி நாட்டு வேலை என்றெல்லாம்
உள்ளூர் வாசிகள் விடும் பெறுமூச்சு வளைகுடா நாட்டின்
வெப்பத்தைவிட சற்று அதிகமாகவே சுடுகிறது!

நிதர்சனம்

S.A. நவாஸுதீன் said...

எங்களுகே தெறியாமல் எங்கள் இளமையை அல்லவா முதலீடு
செய்திருக்கிம்றோம்!

இதைவிட தெளிவா வேற எப்படி சொல்றது.

S.A. நவாஸுதீன் said...

நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை!வாலிபத்தை!!
இழப்பீடு கிடைக்காத இழப்பு இது, நஷ்டைஈடு கிடைக்காத நஷ்டம் இது
யாருக்காக!எதற்க்காக!! ஏன்!!!

ஒரே பதில், குடும்பத்திற்காக

SUFFIX said...

//தொலைதூர காதல் செய்தே தொலைந்து போனவர்கள் நாங்கள்
நான் இங்கே நல்லா இருக்கேன் என்று சொல்லும்
default குரலுக்கு சொந்தக்காரர்கள்//

உண்மை தான், வலி இருந்தாலும் வெளிக்காட்டினால் இன்னும் வலி கூடுமோ என பயம்

SUFFIX said...

//எண்ணெய் கிணற்று தவளைகள் நாங்கள்
வாயுக்குழாயில் சிக்கிக்கொண்ட வாயில்லா பூச்சிகள்//

நல்ல வரிகள்

SUFFIX said...

//தந்தையின் கடன்,தங்கையின் திருமணம் தம்பியின் படிப்பு
சொந்தமாய் வீடு,குழந்தையின் எதிர்காலம்,குடும்பச்சுமை
இப்படி காரணம் ஆயிரம் தோரணம் போல் கண் முன்னே.//

ஹ்ம்ம்ம்ம்ம்!!

அப்துல்மாலிக் said...

//டாலருக்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து //

அப்போ திர்ஹாம்க்கு இல்லியா? நாங்களும் அடகுவைத்துவிட்டு திருப்ப முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறோம்

அப்துல்மாலிக் said...

//எங்கள் காதல் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது
//

அதை தெரியப்படுவது கூட டெக்னாலஜியை பயன்படுத்தும் அவலம்

அப்துல்மாலிக் said...

//நாங்கள் கலப்பை பிடிக்கவில்லை ஆனால் நாங்களும்
கலைத்துதான் போகிறோம்.//

உண்மைதான்..

அப்துல்மாலிக் said...

//தந்தையின் கடன்,தங்கையின் திருமணம் தம்பியின் படிப்பு
சொந்தமாய் வீடு,குழந்தையின் எதிர்காலம்,குடும்பச்சுமை
இப்படி காரணம் ஆயிரம் தோரணம் போல் கண் முன்னே.
//

ஆமாங்க இதுகலெல்லாம்தான் முக்கிய காரணம்

rose said...

நட்புடன் ஜமால் said...
உனக்கென்ன!

விமான பயணம் வெளி நாட்டு வேலை என்றெல்லாம்
உள்ளூர் வாசிகள் விடும் பெறுமூச்சு வளைகுடா நாட்டின்
வெப்பத்தைவிட சற்று அதிகமாகவே சுடுகிறது!
]]


இதன் வேதனையை சொல்லில் சொல்லி மாளாது ...

\\
ஆமாம் அண்ணா

rose said...

sakthi said...
கனிப்பொறியிலும் கைப்பேசியிலும் காதலியின் குரல் கேட்டு கேட்டு
எங்கள் காதல் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது

நச் வரிகள் மா

\\
நன்றி சக்தி

rose said...

S.A. நவாஸுதீன் said...
நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை!வாலிபத்தை!!
இழப்பீடு கிடைக்காத இழப்பு இது, நஷ்டைஈடு கிடைக்காத நஷ்டம் இது
யாருக்காக!எதற்க்காக!! ஏன்!!!

ஒரே பதில், குடும்பத்திற்காக

\\
உண்மைதான் தலைவா

ARAFBENA said...

hai!
a long time back
sorry
im busy
not work


then were is your husband(lover)
near for u.
tell me quick
if he's with you happy!
otherwise .............

rose said...

ஷ‌ஃபிக்ஸ் said...
//எண்ணெய் கிணற்று தவளைகள் நாங்கள்
வாயுக்குழாயில் சிக்கிக்கொண்ட வாயில்லா பூச்சிகள்//

நல்ல வரிகள்

\\
நன்றி ஷஃபி அண்ணா

rose said...

அபுஅஃப்ஸர் said...
//எங்கள் காதல் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது
//

அதை தெரியப்படுவது கூட டெக்னாலஜியை பயன்படுத்தும் அவலம்
\\
வேதனைதான்

rose said...

ARAFBENA said...
hai!
a long time back
sorry
im busy
not work

\\
i know

rose said...

ARAFBENA said...
hai!
a long time back
sorry
im busy
not work


then were is your husband(lover)
near for u.
tell me quick
if he's with you happy!
otherwise .............

\\
hahahaha

ARAFBENA said...

were are spoiling our life for our family.
u focus all our heart beats in via your post.
many line are touching my heart's
i like it too much.

rose said...

ARAFBENA said...
were are spoiling our life for our family.
u focus all our heart beats in via your post.
many line are touching my heart's
i like it too much.

\\
thx anna

R.Gopi said...

வணக்கம்

இப்போதுதான் முதன்முதலாக தங்கள் வலைப்பதிவிற்கு வருகிறேன்... (தமிழரசியின் வலையினூடாக..)... இனி தொட‌ர்ந்து வ‌ருவேன்...

உள்ளே வந்தவுடனே....அடடே...இந்த அயல்நாட்டு மோகத்தை பற்றித்தானே நாமும் எழுதி வருகிறோம் என்று நினைத்து கொண்டேன்..... என் வலைத்தளம் (www.edakumadaku.blogspot.com)
நேரம் கிடைக்கும் போது வந்து எட்டி பாருங்கள்...அப்படியே என் மற்றொரு வலைத்தளமான www.jokkiri.blogspot.com.

//மனம் முழுக்க
சோகத்தோடு கைப்பேசியில் கூக்குரலிடும்
கைய்யாலாகாதவர்கள்//

சூடு ப‌றக்குதே....ய‌ப்பா...

//கனிப்பொறியிலும் கைப்பேசியிலும் காதலியின் குரல் கேட்டு கேட்டு
எங்கள் காதல் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது//

நிஜ‌மே நிஜ‌மே....க‌ச‌ப்பான‌ நிஜ‌மே....

//நான் இங்கே நல்லா இருக்கேன் என்று சொல்லும்
default குரலுக்கு சொந்தக்காரர்கள்.//

???!!!!

//வியர்வையில் நாங்கள் உழன்றாலும் விடுமுறைக்கு போகும்முன்
வாசனை பூச்சு வாங்க மறப்பதில்லை
எங்கள் வியர்வையின் வாசம் வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க//

வாவ்..... சூப்ப‌ர்.......

//எண்ணெய் கிணற்று தவளைகள் நாங்கள்
வாயுக்குழாயில் சிக்கிக்கொண்ட வாயில்லா பூச்சிகள்//

ம்ம்ம்ம்ம்ம்....... நல்லாயிருக்கு.....

//விமான பயணம் வெளி நாட்டு வேலை என்றெல்லாம்
உள்ளூர் வாசிகள் விடும் பெறுமூச்சு வளைகுடா நாட்டின்
வெப்பத்தைவிட சற்று அதிகமாகவே சுடுகிறது!//

ரொம்ப‌ ச‌ரியா சொல்லி இருக்கீங்க‌.....

//எங்களுகே தெறியாமல் எங்கள் இளமையை அல்லவா முதலீடு
செய்திருக்கிம்றோம்.//

படிக்கும் போது எனக்கு வலிக்கிறது.....

//காரணம் ஆயிரம் தோரணம் போல் கண் முன்னே.//

சரியே.... மிக சரியே......

SUBBU said...

காதல் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது

அதிரை அபூபக்கர் said...

/வியர்வையில் நாங்கள் உழன்றாலும் விடுமுறைக்கு போகும்முன்
வாசனை பூச்சு வாங்க மறப்பதில்லை
எங்கள் வியர்வையின் வாசம் வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க//

ஆம் உண்மைதான்.. வலிக்கின்ற வரிகள்.. அருமை..

SUFFIX said...
This comment has been removed by the author.
SUFFIX said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.

Thenammai Lakshmanan said...

superb
asathitiinga honey.
each and every line expressess ur
thoughts strongly.
ayal naatu agathigala ivvalavu
miserables face pannurathu unbearablethaan
congrats thodarnthu ezuthungal

rose said...

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said
\\
thenammailakshmanan
\\
நன்றி

தேவன் said...

/// எங்கள் வியர்வையின் வாசம் வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க ///

):

/// எங்கள் இளமையை அல்லவா முதலீடு செய்திருக்கிம்றோம் ///

வேதனை !!!

/// யாருக்காக!எதற்காக!! ஏன்!! ///

...

சூன்யமாகிப்போனதை போன்ற உங்கள் உணர்வுகளை நல் வழியில் செயல் படுத்துங்கள்.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Vijiskitchencreations said...

நல்ல அருமையான கவிதை.
வந்து கவிதை வடிவில் வந்து இங்கும் சொல்லுங்கோ.
http://vazhvuneri.blogspot.com

நட்புடன் ஜமால் said...

எங்கிட்டு இருக்கியள் நீண்ட நாட்களாக சத்தம் இல்லையே!

நட்புடன் ஜமால் said...

நலமா மேடாம்