Thursday, April 2, 2009

என்னவன் டையிரியிலிருந்து


நீ காற்று_நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்_ஆம்
உனக்கு பிடித்த வரிகள்;
நீ என்னிடம் அடிக்கடி சொல்லிய வரிகள்;
தென்றலாய் இருந்த என்னை சூறாவளியாய் சுற்ற வைத்தாய்
கடல் அலை நான் என்றேன்
கடற்கறை நீ என்றாய்
என் நினைவுகளும் நிஜங்களும் நீ என்றேன்
உன் நெஞ்சத்தின் நினைவுகல்
தடம் மாறி போனது ஏனோ?
என்னை நேசிக்கத்தானடி சொன்னாய்
ஆனால் சுவாசித்தேன்_என் குற்றம்தான்
உன்னை குறைகூற எனக்கு தகுதி இல்லை
ஏனோ ஒவ்வொரு நொடியும் உனக்காக வாழ்கிறேன்
உன் அழகிய கண்களில் என் உயிர்
தயவு செய்து நீ அழாதே;
இப்படி எவ்வளவோ எனக்காக நீ சொன்னாய்
அத்தனையும் சுமந்தேன்_இறுதியில்
நீ என்னிடம் வந்து சொன்ன ஒரு செய்தி
அதை கேட்ட நான் அதிர்ந்தேன்_ஆம்
நாளை என்னை பெண் பார்க்க வருகிறார்கள்
சம்மதம் சொல்லவா_என்ன இது
ஒரு உயிரை பலி கொடுக்கும் முன்
அதனிடம் உன் உயிரை எடிக்கவா என்று
கேட்பதுபோல் அல்லவா உள்ளது
என்ன செய்வது பாவம் அவள்
இன்னும் விளையாட்டு பிள்ளையாய் இருக்கிறாள்
ஆம் அந்த விளையாட்டு பிள்ளையை
என் நெஞ்சில் சுமந்தவனாய் இன்னும் நான்
மணலில் எழுதிய வார்த்தைகள்
அலையின் பாசத்தால் அழிந்து போனதோ
விளையில்லா என் பாசத்தை
விற்பனை செய்து விட்டாய்
தலைமகன் தனியே;கலைமகள் எங்கே நீ?




198 comments: